search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்கள் பள்ளிகள்"

    கேரளாவில் ஆண்கள் பள்ளிகளில் ‘நாப்கின்’ எந்திரம் வைத்ததாக கூறி மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளதால், அதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.#SanitaryNapkinMachines
    கொச்சி:

    பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை எரித்து அழிப்பதற்காக எந்திரங்கள் உள்ளன. பல மாநிலங்களில் இவற்றை பெண்கள் கல்லூரி மற்றும் பள்ளிகளில் நிறுவி இருக்கிறார்கள்.

    கேரள மாநிலத்திலும் இதேபோல பல பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் எந்திரம் மற்றும் நாப்கினை எரிக்கும் எந்திரங்களை வைத்துள்ளனர்.

    கொச்சி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் எந்திரம் வைக்கப்பட்டது. கடந்த 2017-18 நிதியாண்டில் வைக்கப்பட்ட நாப்கின் எந்திரங்களுக்கான செலவு தொகைகளை கணக்கிட்டு நிதி தணிக்கை குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அதில் பள்ளிகளில் நாப்கின் எந்திரங்களை பொருத்த ரூ.26 லட்சத்து 90 ஆயிரம் செலவிட்டதாக கூறப்பட்டிருந்தது.

    நிதி தணிக்கை குழு அதிகாரிகள், இந்த கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஆண்கள் பள்ளிகளிலும் நாப்கின் எந்திரம் வைத்ததாக கணக்கு காட்டப்பட்டிருந்தது. இதை கவனித்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

    அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ஆண்கள் பள்ளிகளுக்கு சென்று பார்த்தபோது, சில இடங்களில் எந்திரங்கள் பொருத்தப்படாமல், அறையில் வைக்கப்பட்டிருந்தது. சில பள்ளிகளில் பொருத்தப்பட்டு செயல்படுத்தப்படாமல் இருந்தது தெரியவந்தது.  

    இதையடுத்து ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்திற்கான செலவுக்கு நிதி தணிக்கை துறை அனுமதி அளிக்கவில்லை. மேலும், இதில் மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளதால் அதுபற்றி விசாரணை நடத்தவும் தணிக்கை துறை உத்தரவிட்டுள்ளது.

    இந்த மோசடியின் பின்னணியில் யார், யார் இருந்தார்கள்? என்பது இனிமேல் தான் தெரியவரும். #SanitaryNapkinMachines

    ×